மத்தியப்பிரதேச மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கட்லாபுரா பகுதியில் உள்ள நதியில் இன்று காலை 4.30 மணிக்கு விநாயகர் சிலையை கரைக்க சிலர் படகில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மேலும் சிலர் நீரில் மூழ்கி இருக்க வாய்ப்புள்ளது என்பதால் தொடர்ந்த தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.